Posts

மஸ்ஜித் இந்தியா பாதாள சாக்கடையில் வீழ்ந்து மடிந்த விஜயலட்சுமியின் நீதிமன்ற முடிவை ஏற்கிறேன்- ஹன்னா இயோ அறிவிப்பு

Image
எஸ்.எஸ்.மணிமாறன்   கோலாலம்பூர், மே 9 - சில ஆண்டுகளுக்கு முன்பு மலேசியா சுற்றுலா மேற்கொண்டிருந்த இந்தியப் பிரஜையான விஜயலட்சுமி, இங்கு தலைநகரில் உள்ள மஸ்ஜித் இந்தியா பகுதியில் பொருட்கள் வாங்க வந்த நேரத்தில், எதிர்பாராமல் பாதாள சாக்கடையில் வீழ்ந்து மடிந்த சம்பவத்தைத் தொடர்ந்து அரசின் அதிகாரிகள் பலரும் மாதக்கணக்கில் தேடல் முயற்சியில் ஈடுபட்ட நிலையில் உடல் கிடைக்காமல் போனதால் அதை பின்னர் கை விட்டனர்.  இறந்து போன விஜயலட்சுமியின் மகன் எம்.சூரியா என்பவர், வழக்குரைஞர் பார்த்திபன் மூலம் தற்போது நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்துள்ளார்.  சில தினங்களுக்கு முன்பு விஜயலட்சுமியின் இறப்புச் சான்றிதழ் கிடைக்கப் பெற்றதால், அதை வைத்து வழக்கு சார்வு செய்யப்பட்ட நிலையில், கூட்டரசுப் பிரதேச அமைச்சர் புவான் ஹன்னா இயோ, வழக்கு தற்போது நீதிமன்றத்தில் இருப்பதால், நீதிமன்றம் வழங்க விருக்கும் தீர்ப்பு முடிவுகளை தாம் ஏற்றுக் கொள்வதாக இங்கு நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் மேற்கொண்ட அறிவிப்பை வெளியிட்டார்.-Alaiolinews

மோரிப்,டூசுன் டுரியான் திரௌபதி அம்மன் ஆலய 145 ஆவது வருடாந்திர விழாவில் பிரமுகர்கள் கௌரவிக்கப்பட்டனர்

Image
எஸ்.எஸ்.மணிமாறன் பந்திங், மே  -  இங்கு, மோரிப் சாலையில்,  தொங்கா சிற்றூரை ஒட்டி அமைந்துள்ள டூசுன் டுரியான் தோட்ட அருள்மிகு ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலயத்தின் 145 ஆவது வருடாந்திர பூக்குழி உற்சவத் திருவிழாவில் அழைக்கப் பட்ட முக்கிய பிரமுகர்களை ஆலய நிர்வாகத்தினர் வரவேற்று மாலை பொன்னாடை அணிவித்து கௌரவித்தனர்.  அந்த வகையில், கோலலங்காட் நகராண்மைக் கழகத்தின் உறுப்பினரும் கோலலங்காட் கெ அடிலான் மகளிர் அணித் தலைவியுமான திருமதி உமா நந்தினி ஞானப்பிரகாசம், ஆலய நிகழ்ச்சிக்கு அழைக்கப் பட்டு சிறப்பு செய்யப்பட்டார்.  ஆலய நிர்வாகத்தினர் சார்பில் ஆலயத் தலைவர் ஆறுமுகத்தின் துணைவியார், உமா நந்தினியைக் கௌரவித்தார்.  அவருடன் கோலலங்காட் கெ அடிலான் மகளிர் அணியின் துணைத் தலைவி வசந்தியும் கலந்து கொண்டார்.  நேற்று இரவு நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியை ஆலயச் செயலாளர்  பெ.நாகராஜன் நேர்த்தியாக வழி நடத்தினார்.  வரும் 11.5.2026 திங்கட்கிழமை அன்று மாலை 4 மணி தொடக்கம், பக்தர்கள் மோரிப் கடற்கரைப் பகுதியில் இருந்து பால்குடம் காவடிகள் எடுத்து வந்து ஆலய வாசலில் அமைக்கப்பட்டிருக்கும் பூக்கு...

மருத்துவ முகாம்களில் இந்தியர்களின் வருகை ஆரோக்கியமாக இல்லை - டத்தோ சிவநேசன் வருத்தம்!!

Image
பீடோர், மே 9- பொது மக்களின் நலனில் அக்கறைக் கொண்டு ஏற்பாடு செய்யப்படும் சுகாதார நிகழ்ச்சிகள்,மருத்துவ முகாம்களில் இந்தியர்களின் வருகை வருத்தம் அளிப்பதாக பேரா மாநில சுகாதாரம், மனிதவளம், ஒருமைப்பாடு மற்றும் இந்தியர் நல்வாழ்வுத்துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் மாண்புமிகு டத்தோ அ.சிவநேசன் தனது கவலையை வெளிப்படுத்தினார். மலாய்காரர்களும் சீனர்களும் தங்களின் ஆரோக்கியம் சார்ந்த விடயங்களில் காட்டும் அக்கறை மற்றும் அதுசார்ந்த விழிப்புணர்வு இந்தியர்களிடையே இன்னமும் ஏமாற்றம் அளிக்கும் நிலையில் இருப்பது வருத்தமானது என்றும் அவர் சுட்டிக்காண்பித்தார். பீடோர் டேவான் முகிபாவில் நடைபெற்ற காது,மூக்கு மற்றும் தொண்டைக்கான இலவச மருத்துவ பரிசோதனை முகாமைத் தொடக்கி வைத்து பேசிய பின்னர் சுங்கை சட்டமன்ற உறுப்பினருமான அவர் இதனைச் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இன்றைய நிலையில் தனிமனித ஆரோக்கியம் அவசியமானது.ஒவ்வொருவரும் தங்களின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்பதையும் நினைவுறுத்திய அவர் பீடோர்,சுங்கை மற்றும் தாப்பா வாழ் மக்களுக்காக இந்த சுகாதார முகாமை ஏற்பாடு செய்த்ததாகவும் கூறினார். பொதுவாக இரத்ததானம...

பாரம்பரிய கலை மரபை மீட்டெடுத்த ‘நாட்டியஞ்சலி 2026

Image
கே.கே.ஆர்.தேவி ஜோகூர் பாரு, மே 10– “நாட்டியத்தின் வழி ஒரு சமர்ப்பணம்” என்ற கருப்பொருளில், நடராஜர் நாட்டிய ஆலயாவின் பிரமாண்டமான கலை நிகழ்ச்சி ‘நாட்டியஞ்சலி 2026’ கடந்த மே 1ஆம் தேதி சிறப்பாக நடைபெற்றது. 18 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அரங்கேறிய இந்நிகழ்ச்சி, பாரதநாட்டியத்தின் செழுமை, அதன் ஆன்மிக ஆழம், தமிழர் கலை மரபின் உயர்வை வெளிப்படுத்திய ஒரு முக்கிய கலாச்சார நிகழ்வாக அமைந்தது. மலேசியாவின் ஜோகூர் பாருவில் இயங்கி வரும் நடராஜர் நாட்டிய ஆலயா, பாரம்பரியம், ஒழுக்கம், கலை நயம் ஆகியவற்றை ஒருங்கிணைத்து இளம் தலைமுறைக்கு கலைக் கல்வி வழங்கி வரும் முன்னணி கலை நிலையமாக திகழ்கிறது. இந்நிகழ்வை வழிநடத்திய குரு ஸ்ரீ ராஜேந்திரன் ஸ்ரீனிவாசர் அழகர், பல ஆண்டுகளாக பாரதநாட்டியத்துடன் இணைந்த பாரம்பரிய,  மக்கள் நாட்டிய வடிவங்களையும் அர்ப்பணிப்புடன் கற்பித்து வருகிறார்.  அவரது பயிற்சியில் வளர்ந்த மாணவர்கள், இந்நிகழ்வில் தங்களின் திறமை, அபிநய ஆழம், கலை ஒழுக்கத்தை சிறப்பாக வெளிப்படுத்தினர். குருவின் கற்பித்தல் முறையில் நாட்டிய நுட்பங்களோடு பக்தி உணர்வு, பண்பாட்டு விழிப்புணர்வு மற்றும் ஒழுக்கம் ஆகியவை மு...

மக்கள் தீர்ப்பை மதிக்காத ஆட்சிமுறை ஜனநாயகத்திற்கு ஆபத்து - லினா மனோ அருண்!

Image
கே.கே.ஆர்.தேவி ஜோகூர், மே 10 – மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத ஐந்து பேரை ஜோகூர் மாநில சட்டமன்ற உறுப்பினர்களாக நியமிக்க வழிவகுக்கும் அண்மைய சட்டத் திருத்தம், ஜனநாயகத்தின் உண்மையான நோக்கத்தையே கேள்விக்குறியாக்குவதாக மலேசிய இந்திய மக்கள் கட்சியின் தேசிய சக்தி பிரிவு துணைத் தலைவரும் ஜோகூர் மாநில சக்தி பிரிவு செயலாளருமான லினா மனோ அருண் தெரிவித்துள்ளார். ஜனநாயகத்தின் மையமாக மக்கள் வழங்கும் வாக்கும் ஆணையும் தான் இருப்பதாக அவர் கூறினார். அந்த நிலையில், மக்களின் நேரடி தேர்வின்றி சிலர் மாநில நிர்வாக முடிவுகளில் பங்கேற்கும் சூழல் உருவாகுவது, மக்களின் அதிகாரம் குறைக்கப்படுகின்றது என்ற சந்தேகத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இது சாதாரண அரசியல் மாற்றமாக பார்க்கப்படக் கூடாது என்றும், “மறைந்திருக்கும் ஜனநாயக எச்சரிக்கை” எனக் கருத வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அரசின் அனைத்து அமைப்புகளும் வெளிப்படைத் தன்மை, மக்கள் பிரதிநிதித்துவம் மற்றும் பொது பொறுப்புணர்வு ஆகிய அடிப்படை கொள்கைகளை பின்பற்ற வேண்டும் என்பதே ஜனநாயகத்தின் நோக்கம் என்றும் அவர் குறிப்பிட்டார். மக்களே தங்கள்...

Ungkit nostalgia 27 tahun lalu, Taal dibikin sekuel!

Image
By Editor BAGI peminat filem Bollywood yang membesar pada era 1990-an, pasti tahu kehebatan filem Taal lakonan Aishwarya Rai, Akshaye Khanna dan Anil Kapoor. Filem yang ditayangkan pada 1999 itu menjadi fenomena bukan sahaja kerana jalan ceritanya menarik, tetapi lagu-lagunya yang indah dan malar segar. Kini berita gembira menanti anda termasuk di Malaysia apabila dalam perkembangan terbaharu, penerbit asal Taal, Subhash Ghai mengumumkan bahawa skrip filem Taal 2 dalam pembikinan dan hampir selesai sepenuhnya. Ramai peminat berharap dapat melihat gandingan Aishwarya dan Akshaye selepas 27 tahun. Bagaimanapun, Subhash berkata dia tidak akan mengambil pelakon lama kerana mereka sudah menjangkau usia. Antara nama yang hangat disebut-sebut bakal menjadi hero dan heroin dalam sekual iaitu Taal 2 ialah Ahaan Panday dan Aneet Padda.- Alaiolinews

MAICCI announces the demise of former MAICCI President, Tan Sri Dr Kenneth Eswaran

Image
By Alaiolieditor KUALA LUMPUR - It is with profound sadness and deep sorrow that the Malaysian Associated Indian Chambers of Commerce and Industry (MAICCI) announces the passing of former MAICCI President, Tan Sri Dr Kenneth Eswaran, who departed peacefully at approximately 6.00 a.m. today, 09 May 2026. On behalf of the entire MAICCI leadership and members nationwide, MAICCI President Dato' Seri N. Gobalakrishnan extends our heartfelt condolences to the family, loved ones, friends, and associates of the late Tan Sri Dr Kenneth Eswaran. Tan Sri Dr Kenneth Eswaran was a distinguished leader, respected entrepreneur, and visionary who contributed immensely to the growth and strengthening of MAICCI and the Indian business community in Malaysia. His leadership, dedication, and unwavering commitment towards empowering entrepreneurs and fostering economic development will always be remembered and cherished. Throughout his years of service, he played a pivotal role in advancing MAICCI’s mis...